சருகான மண்வீடு...

மலை தூர்ந்து சருகான
மண்வீடு எங்கே ..?
மலரோடு உறவாடும்
மணமேடை இங்கே..!

மணி மாலை கழல் ஏற்கும்
மணவாட்டி எங்கே..?
மருதாணி கரம் நாணல்
மடி மீது இங்கே..!

புயலோடு உருவான புது
ராகம் எங்கே..?
புரியாத இதயத்தில்
அனலாடும் இங்கே..!

கதியோடு விதி சேர்ந்து
கதை பேசியது எங்கே..?
களை மேட்டில் முளை
நாற்றில் நிலை
நாட்டும் இங்கே....!

அங்கும்,இங்கும்,எங்கும்..
நீ உணர்வாகி உயிர் மீள்வாய்
என உரமாகும் எம் நாட்கள்..Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72