ஒற்றை குடைக்குள் நாமிருவர்..

சாலையோர மரநிழலின்
குடைக்குள் ஒளிந்திருக்கும்
மெல்லிய புன்னகை..

காற்றுவெளி ஊடே என்
செவியை வருடியது..

தெளிந்த மனதின் திறவு
கோலால் உணர்வுகளை
உள்ளிருத்தி..

இதய கருப்பையில் பிரசவித்த
முதல் குழந்தை இன்று பூமி
தாயின் மடியில் உறங்க
ஒரு வரம் கேட்கிறது...

நாட்களின் கரங்களை பற்றி
என் கனவுகளுக்கு செப்பனிட்டு
ரஞ்சன நிலவு அழகாய் துயில்
கொள்ளும் முற்றத்தின் ஒரு
மூலையில் உறைகிறது..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72