ஒரு வரி கவிதை..

ஒரு துளி மழையினில் மனமிங்கு
நனையுது. ஒரு வரி கவிதையில்
நினைவுகள் கரையுது. ஒரு கொடி
மணம் தர மல்லிகை வாடுது..
ஒரு நொடி பிரிந்த பின்
உணர்வுகள் சருகாகுது..

உயிர் தொடும் வரைவினில்
சுவடுகள் நடந்திட பாதங்கள்
ஏங்குது.

பெண் உருகிய மெழுகிடை
ஒளிர்ந்திடும் அழகினில்
உலகமும் வாழுது..

சுடு மணல் மடியினில் நண்டுகள்
கீறுது. சுடர்விடும் ஒளி மடல்
குருதியில் தாழுது..

மறுபடி பிறந்திட மழலையும்
தூங்குது_உன் மடியினில் படர்ந்திட
மனமது செடியினில் வாடுது..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72